மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து சிதறி, கல்லூரி மாணவி உயிரிழப்பு - பெற்றோர்களே கவனம்.!

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து சிதறி, கல்லூரி மாணவி உயிரிழப்பு - பெற்றோர்களே கவனம்.!



Chennai Kolathur College Girl Santhiya Died Kerosene Stove Blast

சமையல் செய்வதற்கு கல்லூரி மாணவி மண்ணெண்ணெய் அடுப்பை பற்றவைத்த போது, ஸ்டவ் வெடித்து சிதறி மாணவி பலியான சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள கொளத்தூர் ஜானகி நகர் பகுதியை சார்ந்தவர் மணி. இவரது மகள் சந்தியா (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டில் சமையல் செய்ய கல்லூரி மாணவி சந்தியா மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, ஸ்டவ் அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. 

chennai

மேலும், சந்தியாவின் உடலில் மண்ணெண்ணெய் பட்டு உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த சந்தியா, அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சந்தியா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.