கணவனை இழந்த தங்கை வீட்டில், மனைவியுடன் சேர்ந்து சகோதரன் செய்த திருட்டுச் செயல்.!

கணவனை இழந்த தங்கை வீட்டில், மனைவியுடன் சேர்ந்து சகோதரன் செய்த திருட்டுச் செயல்.!



brother thefted in sister home

சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவருக்கு ஷோபானா என்ற பெண்ணுடன் திருமணமாகி இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், சாதிக் பாஷாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து அவரது உடல், சொந்த ஊரான மாங்காடு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஷோபனா வடபழனியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, அருகில் வசிக்கும் தனது மூத்த சகோதரன் சாஹித்தை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று ஷோபனா தனது வடபழனி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகைகள் மற்றும் 80 ஆயிரம் பணமும் காணமல் போயிருப்பது தெரியவந்தது.

                              cctv

இதனால் அதிர்ச்சியடைந்த ஷோபனா இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷோபனா வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில், ஷோபனாவின் மூத்த சகோதரன் சாஹித் தனது மனைவி அனுஷா உடன் சேர்ந்து, கள்ளச்சாவி மூலம் வீட்டின் பூட்டை திறந்து, நகை மற்றும் பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்தநிலையில், ஷோபனாவின் மூத்த சகோதரன் சாஹித் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.