அட பாவமே!! பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொலை... துணிகர செயலில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் கைது..!

அட பாவமே!! பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸ் ஏற்றி ஒருவர் கொலை... துணிகர செயலில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் கைது..!



an-ambulance-driver-was-arrested-for-murdering-an-ambul

விருதுநகர் மாவட்டத்தில் அரங்கேறிய கொடூரம். வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஆம்புலன்ஸை ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பட்டாம்புதூரை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் அப்பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான முருகன் என்பவர் டிவி பழுது பார்க்கும்படி ரூ.1500 முன் பணமாக கொடுத்துள்ளார். ஆனால் சங்கரலிங்கம் டிவி பழுது பார்க்க காலம் தாழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Murder

இதனால் கோபமடைந்த முருகன் சங்கரலிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது டிவியை திரும்ப பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வாங்கிய முன் பணத்தை விரைவில் தருமாறு திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இவர்கள் இருவருக்கிடையையும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கவே ஆத்திரமடைந்த முருகன் ஆம்புலன்ஸை ஏற்றி சங்கரலிங்கத்தை கொன்றதாக சொல்லப்படுகிறது. பின்பு தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவர் முருகனை கைது செய்துள்ளனர்.