பெட்ரோல் பங்க் ஊழியர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!,.காதல் விவகாரம் காரணமா?!..போலீசார் விசாரணை..!

பெட்ரோல் பங்க் ஊழியர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!,.காதல் விவகாரம் காரணமா?!..போலீசார் விசாரணை..!


A youth working in a petrol station was hacked to death by mysterious persons in Trichy

திருச்சியில் மர்மநபர்களால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மேல அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் வசித்து வருபவர் ரமேஷ் இவரது மகன் ரிஷி (21). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார்.

பெட்ரோல் பங்க் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்த ரிஷி சிறிது நேரம் கழித்து வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். வெளியே சென்ற ரிஷி இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவருடைய பெற்றோர் கவலை அடைந்தனர். எனவே ரிஷியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் மேல கல்கண்டார் கோட்டை சுடுகாடு பகுதியில் ரிஷி வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் தெரிந்தவுடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்மலை காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை சம்பவம் குறித்து ரிஷியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொன்மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.