காதலை ஏற்காத தோழியின் டூ வீலர் பெட்ரோல் டேங்கில் மண் அள்ளிப்போட்டு பழிவாங்கிய இளைஞர்.. என்னடா இப்படி இறங்கிடீங்க?..!
காதலை ஏற்காத தோழியின் டூ வீலர் பெட்ரோல் டேங்கில் மண் அள்ளிப்போட்டு பழிவாங்கிய இளைஞர்.. என்னடா இப்படி இறங்கிடீங்க?..!
தனது தோழி காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர் கோபி (வயது 52), பெயர் மாற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவரின் மகள் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 10:00 மணி அளவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களில் ஒருவர் கீழே இறங்கி, கோபியின் மகளது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் டேங்கை திறந்து மண்ணை போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசித்து வரும் நபர்கள் பார்த்த நிலையில், அங்கிருந்து சுதாரித்துக் கொண்டு அந்த இளைஞர்கள் தப்பி சென்றுள்ளார். கோபி பெட்ரோல் டேங்கை பார்த்தபோது மண் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அங்குள்ள கேமராவை ஆய்வு செய்தனர்.
பின் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டேரி சோமாத்தம்மன் கோவிலை சேர்ந்த பரத் (வயது 19), ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சல் (வயது 19) ஆகியோரை கைது விசாரணை செய்தனர்.
விசாரணையில், பரத்துடன் கோபியின் மகள் நட்பாக பழகி வந்த நிலையில், பரத் பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் பரத்தின் மீது காதல் வயப்படாத பெண்ணோ, நான் உன்னுடன் நட்பாக பழகுகிறேன் என்று அறிவுரை கூறி கண்டித்துள்ளார்.
பரத்துடன் பேசுவதையும் நிறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பரத் தனது நண்பர் அப்சலுடன் சேர்ந்து கல்லூரி மாணவியின் இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் மண்ணைக் கொட்டியது தெரியவந்துள்ளது. நேற்று இவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.