பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 65 வயது கிழட்டு காமுகன் கைது..!

பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 65 வயது கிழட்டு காமுகன் கைது..!


9-years-girl-harassed-by-65-year-old-man

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 65 வயது காமுகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும் 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் கர்நாடக மாநில கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகாமையில் சென்று கொண்டிருந்த நிலையில், அதே பெட்டியில் பயணம் செய்த 65 வயது முதியவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி உடனடியாக இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் அதே பெட்டியில் பயணம் செய்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளனர்.

chennai

இதனைத் தொடர்ந்து முதியவர் மீது ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், ஜோலார்பேட்டை அருகாமையில் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்ததில், அவர் சென்னை வடபழனி பூக்கார தெருவில் வசித்து வந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் (வயது 65) என தெரியவந்தது.

இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.