ஆன்லைன் முதலீட்டில் பணம் இழந்ததால் அச்சம்.. குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை.!



in Pudukkottai a Mother Kills Child and Dies By Suicide 

 

ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் கேம்:
    
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூவரசக்குடி பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தாயும், குழந்தையுமாக இருவரும் சொந்த கிராமத்தில் வசித்து வந்த நிலையில், கணவர் அனுப்பிய ரூ.80,000 பணத்தை பெண்மணி ஆன்லைன் கேம் விளையாடி இழந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் உள்ளே.!!

கேள்விக்கு பயம்:

இதனால் பதற்றமடைந்தவர் வீட்டுக்கு கணவர் வந்தால் அனுப்பிய பணம் எங்கே? என கேட்பாரே என பயந்து முதலில் குழந்தையை கொலை செய்து பின் தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். 

தடை விதிக்க கோரிக்கை:

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கடுமையான தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 
 

 

 

இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்…!! முழு விபரம் உள்ளே...