நீச்சல் தெரியாததால் சோகம்.. திருமண வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்.!

20 வயதுடைய இளைஞர் நீச்சல் தெரியாமல் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தபோது உயிரிழந்தார்.
திருமண வீடு:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியில் வசித்து வருபவர் அயன் அகமது (வயது 20). சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் சகோதரி வீட்டில் நடந்த திருமணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "என் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா".. கண்டுபிடித்து தந்தால் சன்மானம்.. விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட கணவன்.!
தவறி விழுந்தார்:
இந்த திருமண கொண்டாட்டம் அங்குள்ள ஹரகேடா பகுதியில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் நடந்துள்ளது. அனைவரும் குதூகலமாக கொண்டாடிய நிலையில், இளைஞர் அயன் அகமது நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
அவருக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படும் நிலையில், நீச்சல் குளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-yr-old youth drowns in swimming pool during wedding at #farmhouse in #Gunga
— The Times Of India (@timesofindia) May 31, 2025
Read more 🔗https://t.co/7GsGsWR6YF#Bhopal #MadhyaPradesh pic.twitter.com/unv4z4p7wo
இதையும் படிங்க: செருப்பால் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி..! இதெல்லாம் தேவையாம்மா?