மருத்துவமனையில் நடந்தது என்ன...? காய்ச்சலுக்காக சென்ற 6 வயது சிறுவன் இறப்பு... மருத்துவரே காரணம் என்று தந்தை பகீர் புகார்...

மருத்துவமனையில் நடந்தது என்ன...? காய்ச்சலுக்காக சென்ற 6 வயது சிறுவன் இறப்பு... மருத்துவரே காரணம் என்று தந்தை பகீர் புகார்...



6 year old child died for fever in rajapalayam

ராஜபாளையத்தில் அரசு மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் பாஸ்கரன். இவர் அரசு மருத்துவர் மட்டுமல்லாமல் தனக்குச் சொந்தமாக தனியார் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் என்பவரின் ஆறு வயது மகன் தேவநாதனுக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈஸ்வரன் தனது மகன் தேவநாதனை டாக்டர் பாஸ்கரனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

Rajapalayam

இந்நிலையில் சிறுவன் தேவநாதனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ஒன்றும் போடப்பட்டுள்ளது. பின்பு வீடு திரும்பிய தேவநாதனுக்கு முன்பை விட உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதனால் பதறிப் போன தந்தை தேவ நாதனை தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போன தந்தை தன் மகன் இறப்பிற்கு டாக்டர் பாஸ்கரனின் தவறான சிகிச்சையே காரணம் என்று போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் பாஸ்கரனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.