ஏண்டா உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா... வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்!!

ஏண்டா உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா... வாழைப்பழம் கொடுத்து 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன்!!



6 year old baby raped in Karnataka

கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டபயலகெரே கிராமத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அந்த தம்பதியினரின் வீட்டிற்கு அருகில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் 6 வயது சிறுமியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் சம்பவத்தினத்தன்று சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர்.

karnataka

இவை அனைத்தையும் கண்கானித்து வந்த மணிஷ் தனிமையில் இருந்த சிறுமிக்கு வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் இவற்றை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் வந்ததும் இவை அனைத்தையும் சொல்லி சிறுமி அழுதுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் மணிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.