தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. குடும்பத்தையே அழித்த மதுப்பழக்கம்.. 4 பேர் தற்கொலை!

தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்.. குடும்பத்தையே அழித்த மதுப்பழக்கம்.. 4 பேர் தற்கொலை!



4 family members suicide in madurai

மதுரை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கு, திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

madurai

இதனால் இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் செந்தில்குமாரின் மனைவி வீரலட்சுமி தனது இரண்டு மகள்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

madurai

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.