6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!



31-year-old-man-got-two-life-sentence-by-pocso-court

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் 31 வயது இளைஞனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருன்ராஜ். 31 வயதான இவர் முத்தலாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் அருண்ராஜ், தனது பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

tamilnadu

போக்சோ வழக்கு

இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் அருன்ராஜை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து அருண்ராஜ் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க: செந்தூர் கோவிலுக்குச் சென்ற தாய், 5 வயது மகன் விபத்தில் சிக்கி பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!

இரட்டை ஆயுள் தண்டனை

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளி அருன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினார். மேலும் குற்றவாளி 10,000 ரூபாய் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: சேலம்: ஆன்லைன் விளையாட்டில் லட்சங்களை இழந்த எல்ஐசி முகவர் விபரீதம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!