#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!



2 Dec 2023 Rain Announcement till 7 PM 

 

மிங்ஜாங் புயலின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகமெங்கும் 4 ஆயிரம் தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்கவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (2 டிசம்பர் 2023, இரவு 07:00 மணிவரை) மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.