அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
காதலை கண்டித்த தந்தைக்கு பக்கவாக ஸ்கெட்ச் போட்ட 16 வயது பள்ளி மாணவி.. 4 பேர் கைது.!
காதலை கண்டித்த தந்தைக்கு பக்கவாக ஸ்கெட்ச் போட்ட 16 வயது பள்ளி மாணவி.. 4 பேர் கைது.!
தேனி மாவட்டத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வர அவர் சிறுமியை கண்டித்துள்ளார். மேலும், மாணவியை சங்கரன்கோவில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒரு மாதமும், பெரிய குளத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஒரு மாதமும் தங்கி படித்துள்ளார்.
இதில் மாணவி பெரிய குளத்தில் தங்கி இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த வேறொரு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இதில் அந்த இளைஞருடன் பல இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து தந்தை தனது மகளை மீண்டும் சொந்த ஊருக்கே அழைத்து வந்து வேறொரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். ஆனால் மாணவி அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே மாணவியின் தந்தைக்கு காதல் விவகாரம் தெரிய வர மீண்டும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மாணவியும், அந்த இளைஞரும் மாணவியின் தந்தையை கொலை செய்ய முடிவு செய்து ப்ளான் போட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த இளைஞர் தனது நண்பர்களின் உதவியுடன் மாணவியின் தந்தையை வழிமறித்து அறிவாளால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயமுடன் மீட்கப்பட்ட மாணவியின் தந்தை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவி, இளைஞர் மற்றும் அவரின் நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.