சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் கண்டெடுப்பு...!! ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்லும் பொதுமக்கள்...!!



1000 years old idols found in Sirkazhi... People watching in amazement...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் ஆலயம் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆலயத்தில் வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்திற்காக ஏகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கு வாசல் கோபுரம் அருகே ஏக சாலைக்காக மண் எடுக்கும் போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் அதிகமான செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்துள்ளன.

அந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.

கோவிலில் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் ஆலயம் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆலயத்தில் வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்திற்காக ஏகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கு வாசல் கோபுரம் அருகே ஏக சாலைக்காக மண் எடுக்கும் போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் அதிகமான செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்துள்ளன.

அந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர்.

கோவிலில் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.