#அதிர்ச்சி : ஜேஷ்ட அம்மாவாசை வழிபாட்டின் போது திடீரென தீப்பற்றி எரிந்த ஆலமரம்! பூஜையில் இருந்த பெண்கள் அலறிஅடித்து ஓட்டம்.... பகீர் வீடியோ....!!!
பீகார் மாநிலம் பாட்னாவில், ஜேஷ்ட அமாவாசை வழிபாட்டின்போது ஆலமரத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் கூடி வழிபாடு நடத்திய நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வடஇந்திய மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜேஷ்ட அமாவாசை நாளில் திருமணமான பெண்கள் விரதமிருந்து, ஆலமரத்தடியில் விளக்கேற்றி சாவித்ரி தேவியை வழிபடுவது வழக்கம். குடும்ப நலன் மற்றும் கணவனின் ஆயுளுக்காக இந்த பாரம்பரிய பூஜை நடத்தப்படுகிறது.
விளக்கில் இருந்து பரவிய தீ
அந்த வகையில், பாட்னா அருகே உள்ள பதுகா தாலுகா பகுதியில் அமைந்துள்ள பழமையான ஆலமரத்தடியில் நேற்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள் மரத்தின் விழுதுகளைச் சுற்றி பருத்தி நூல்களை கட்டி, விளக்கேற்றி பூஜை செய்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் போட்ட கும்மாளம்.....நொடியில் உயிரே போயிருக்கும்! அலறிய மக்கள் கூட்டம்! இறுதியில் இளையர்களின் துணிச்சல்....திக் திக் வீடியோ..!!!
அப்போது விளக்கில் இருந்த நெருப்பு, மரத்தைச் சுற்றி கட்டப்பட்டிருந்த நூல்களில் பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக அளவில் சுற்றப்பட்டிருந்த பருத்தி நூல்கள் சில விநாடிகளிலேயே தீயை வேகமாக பரப்பியது. இதனால் ஆலமரம் முழுவதும் தீக்கிரையாகி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அச்சத்தில் ஓடிய பெண்கள்
தீ வேகமாகப் பரவியதை பார்த்த பெண்கள் பலர் அதிர்ச்சியடைந்து, பூஜைப் பொருட்களை அப்படியே விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். காய்ந்த கிளைகள் மற்றும் அடர்ந்த விழுதுகள் தீப்பற்றியதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்போன்களில் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தீப்பற்றிய மரத்தை அணைக்க யாரும் உடனடியாக முயற்சி செய்யவில்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்ததாகவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விழிப்புணர்வு தேவை என கருத்து
வழிபாட்டு இடங்களில் விளக்குகள் மற்றும் தீபங்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் அவசியம் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக மரங்கள் மற்றும் எரிவூட்டும் பொருட்கள் அருகே தீ ஏற்றும்போது பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
Watch: Heartbreaking 💔
A centuries old Vat tree caught fire after a few people carelessly placed burning diyas 🪔 too close to it.
When will people learn to protect heritage and nature with responsibility? pic.twitter.com/BenKKuav4A
— FalconUpdatesHQ (@FalconUpdatesHQ) May 17, 2026
இதையும் படிங்க: காளையின் தலையில் சிக்கிய தண்ணீர் தொட்டி.....சந்தையில் கண்டப்படி சீறிய காளை! துணிச்சலாக களத்தில் குதித்த வாலிபர்கள்! வைரல் வீடியோ!!!