நா மட்டும் தினமும் அங்கே போனால்.. ஒன்னு கூட மிஞ்சாது.! தோனி பகிர்ந்த வைரல் வீடியோ!
நா மட்டும் தினமும் அங்கே போனால்.. ஒன்னு கூட மிஞ்சாது.! தோனி பகிர்ந்த வைரல் வீடியோ!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தான் கடைசியாக சர்வதேச போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் அவர் 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்றார். தற்போது ஓய்வு நேரத்தில் அவர் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தோனி அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. அந்த அளவுக்கு தோனி விவசாயத்தில் அதிகம் ஈடுபாடு உடையவர். இந்தநிலையில், தோனி தனது தோட்டத்தில் ஸ்டாபரியை விளைவித்து சாப்பிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தோனி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை சாப்பிடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தோட்டத்தில் விளைவித்த ஸ்டாபரியை கடித்து சாப்பிடும் தோனி, தான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால் தோட்டத்தில் ஒரு ஸ்டாபரி கூட மிஞ்சாது என பதிவிட்டுள்ளார்.