அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தானா.? வெளியான தகவல்.!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தானா.? வெளியான தகவல்.!
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சென்று நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்றது. பின்னர் அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இதற்காக இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.
இங்கிலாந்தில் இருக்கும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதி எனத் தகவல் வெளியான நிலையில், அதில் பாதிக்கப்பட்ட வீரர் ஒருவர் ரிஷப் பன்ட் என தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் இந்திய அணியுடன் டர்ஹம் நகருக்குப் பயணப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.