ஆசிய கோப்பை 2023: சிறப்பான தொடக்கம் கிடைத்தும் தடுமாறிய இந்திய அணி..!!

ஆசிய கோப்பை 2023: சிறப்பான தொடக்கம் கிடைத்தும் தடுமாறிய இந்திய அணி..!!



In the Super-4 round match against Sri Lanka, they are stumbling with 197 runs for the loss of 9 wickets in 47 overs.

இலங்கை அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்று போட்டியில் 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களுடன் தடுமாறி வருகிறது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய சூப்பர்-4 சுற்றின் 2 வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நேற்று முன்தினம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுநாளான நேற்று முடிவடைந்தது.

சூப்பர்-4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் தலா 1 வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதன் படி ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. நிதானமாகவும், உறுதியுடனும் விளையாடிவரும் இந்த ஜோடி 8 ஓவர்களின் முடிவில் 44 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் 23 ரன்கள் சேர்த்துள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

சிறப்பான தொடக்கம் அளித்த தொடக்க ஜோடி 80 ரன்கள் சேர்த்த பின்பு பிரிந்தது. முதலில் சுப்மன் கில் 19 (25), விராட் கோலி 3 (12), ரோஹித் சர்மா 53 (48) ஆகியோர் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் புதுமுக சுழற் பந்துவீச்சாளர் வெல்லாககே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இணைந்த கே.எல்.ராகுல்-இஷான் கிஷன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. மீண்டும் வெல்லாலகே பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் சிக்கினார். பின்னர் சீரான இடைவெளியில் இஷான் கிஷன் 33, ஹர்டிக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4, பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணி 47 ஓவர்களில்9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்த போது மழையின் குறுக்கீட்டால் போட்டி தடைபட்டது. அக்ஸர் பட்டேல் 15, முகமது சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.