ஐபிஎல் துவங்கும் தேதியை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் கிரிக்கெட் தாதா கங்குலி!

ஐபிஎல் துவங்கும் தேதியை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் கிரிக்கெட் தாதா கங்குலி!



ganguly talk about IPL


ஐபிஎல்-ன் நிர்வக கவுன்சில் கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதனையடுத்து 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24- ஆம் தேதி நடைபெறும் என்றும், ஐபிஎல் இரவு விளையாட்டுகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவித்தார். 

ipl

போட்டிகள் இரவு 7.30க்கு துவங்கலாம் என பேச்சு வார்த்தை இருந்தாலும் கூட, முந்தைய ஆண்டுகளைப் போல இது இரவு 8 மணி முதல் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரேநாளில் இரண்டு போட்டிகளில் நடைபெறும் எண்ணிக்கையும் ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.