நேற்று வெற்றிபெற்ற கையோடு தோனி நேரில் சென்று சந்தித்த அந்த நபர்! நேற்று நடந்த சுவாரசிய சம்பவம்.
நேற்று வெற்றிபெற்ற கையோடு தோனி நேரில் சென்று சந்தித்த அந்த நபர்! நேற்று நடந்த சுவாரசிய சம்பவம்.
சென்னை மற்றும் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி ஹைதராபாத் அணி வீரர் நடராஜனை சந்தித்து பேசிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்கள் எடுத்தது. 168 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் சென்னை அணி வீரர்களின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனிடையே மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்துவந்த சென்னை அணி வீரர்களுக்கு ஹைதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சும் படுபயங்கரமாகவே இருந்தது. குறிப்பாக ஹைதராபாத் அணி வீரர் நடராஜனின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது.
தான் போடும் அனைத்து பந்துகளையும் யார்க்கர் பந்தாக போடுவதில் நடராஜன் சிறப்பாக செயல்படுகிறார். நடராஜன் பந்துவீசுவதை பார்த்து பிரட்லீ உட்பட பல்வேறு வீரர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தோனியின் விக்கெட்டை எடுப்பதுதான் என்னுடைய கனவு என நடராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதேபோல் நேற்றைய போட்டியில் நடராஜன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த உடனே தோனி நேரில் சென்று நடராஜனை சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டனர். இருவரும் பேசிக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
மேலும் எதிர் அணி வீரராக இருந்தாலும், நடராஜன் தோனியின் மிக பெரிய ரசிகர். இதனால் தோனியே நேரில் சென்று அவரை சந்தித்து பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.