உஷாரா இருங்க.... டெல்லி பயணத்திற்கு பிறகு நள்ளிரவில் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட ரகசிய கண்டிஷன்.!!!
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று இரவு தீவிர ஆலோசனை நடத்தினார். டெல்லி சந்திப்புகள், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சி விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம், தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் முக்கிய ஆலோசனையாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் தவெக-விற்கு பெரும் சவால்! இப்படி இருந்த என்ன பன்றது.... ஆவேசத்தில் விஜய்! ரூட்டை மாற்ற போகும் தவெக !!!
டெல்லி பயணம் குறித்து பகிர்ந்த விஜய்
டெல்லி பயணத்தின் அனுபவங்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பு தொடர்பான விவரங்களை விஜய் நிர்வாகிகளுடன் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. பிரதமர் அலுவலகத்தில் தங்களுக்கு மரியாதையான வரவேற்பு கிடைத்ததாகவும், கோரிக்கைகள் தொடர்பான விவகாரங்களை சட்டரீதியான வழிமுறைகள் மூலம் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தேசிய அரசியல் தொடர்புகள் மற்றும் அதன் தாக்கம் குறித்து நிர்வாகிகளிடையே கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து தொடரும் இணைப்பு அலை
ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த இணைப்புகள் கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் என்பதால், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டை விஜய் வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்த இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக நிர்வாகிகள் குறித்து தனி அணுகுமுறை
மறுபுறம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜய் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவிலிருந்து வரும் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் சாதாரண நிர்வாகிகளை உடனடியாக வரவேற்று, மாவட்ட அளவிலேயே இணைப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட பொறுப்புகளில் இருந்தவர்களை அவசரமாக இணைத்துக் கொள்ளாமல், முழுமையான ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்க வேண்டும் என கூறியதாகத் தெரிகிறது.
அடிமட்ட ஆதரவை விரிவுபடுத்துவதோடு, முக்கிய அரசியல் முகங்களை கவனமாக அணுகும் இந்த வியூகம், தவெகவின் திட்டமிட்ட அரசியல் நகர்வாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.