#சற்றுமுன் : திடீர் திருப்பம்.... 1,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த பனையூர் பாபு! விசிகவுக்கு விழுந்த பலத்த அடி.!!!



vck-former-mla-panaiyur-babu-joins-dmk

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு, 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ள இந்த இணைப்பு, கூட்டணி அரசியலிலும் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விசிகவில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த பனையூர் பாபுவின் முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: BREAKING: திடீர் திருப்பம்! மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்...ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்!!!

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இணைப்பு விழா

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது ஆதரவாளர்களுடன் பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். அப்போது  மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், மரியாதை நிமித்தமாக வெள்ளியால் செய்யப்பட்ட செங்கோல் ஒன்றை பரிசாக வழங்கினார்.

திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற கட்சி தலைமையகம், அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தது.

விசிக வட்டாரத்தில் அதிர்ச்சி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நெருக்கமானவராகவும், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகவும் பனையூர் பாபு அறியப்பட்டு வந்தார். பல்வேறு தேர்தல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், திடீரென திமுகவில் இணைந்தது விசிக தொண்டர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த அரசியல் நகர்வு எதிர்வரும் தேர்தல் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பனையூர் பாபுவின் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.

 

இதையும் படிங்க: அதிருப்தியிலேயே அதிமுக அல்லேலப்படுது.... தவெக விற்கு தாவிய கந்தர்வகோட்டை முன்னால் எம்.எல். ஏ...! அதிர்ச்சியில் எடப்பாடி..!!!