திமுக ஆட்சி இறுதியில் அவசரமாக அறிவிக்கப்பட்ட டெண்டர்கள்...! கட்டம் கட்டமாக ரத்து செய்யும் CM விஜய்! பகீர் கிளப்பும் பின்னணி உண்மை.!!!



tamil-nadu-government-contract-review-cost-cutting

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முந்தைய ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டு இன்னும் நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள் தீவிரமாக மறுஆய்வு செய்யப்படுகின்றன. திட்டச் செலவைக் குறைத்து, அரசின் நிதிச் சுமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் புதிய நிபந்தனைகளுடன் மறு டெண்டர்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மறுஆய்வு

பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்கள் கட்டம் கட்டமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக சீர்திருத்தம் மற்றும் திட்டச் செலவு மறுஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசு கருவூலத்திற்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி மிச்சமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: BREAKING: முதல்வர் விஜய் அதிரடியாக ரத்து செய்தார்! ஒரே நாளில் ரூ.2000 கோடி அவுட்... தூய்மை அரசின் அதிரடி செயலால் அதிர்ச்சியில் திமுக..!!!

முறைகேடு புகார்களுக்கு பிறகு தீவிர ஆய்வு

முந்தைய ஆட்சியின் இறுதி மாதங்களில் பல்வேறு திட்டங்கள் அவசரமாக அறிவிக்கப்பட்டு டெண்டர்கள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டங்களில் சிலவற்றின் மதிப்பீட்டுச் செலவு செயற்கையாக உயர்த்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடைமுறைக்கு வராத அனைத்து ஒப்பந்தங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய டெண்டர்களில் செலவு குறையும்?

நிதித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சிறப்பு ஆய்வில், தேவையற்ற செலவுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள் கண்டறியப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திட்டங்களின் உண்மையான செலவு மட்டுமே கணக்கிடப்பட்டு, புதிய நிபந்தனைகளுடன் Tender Review அடிப்படையில் மறு டெண்டர்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த நடவடிக்கையால் திட்டங்களின் மதிப்பீட்டுத் தொகை 10 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும் என்றும், மாநில அரசின் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதோடு வளர்ச்சிப் பணிகளையும் விரைவாக செயல்படுத்த உதவும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும், பல்வேறு துறைகளில் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தங்கள் தொடர்பான பட்டியல்கள் தயாராகி வருவதால், அடுத்த கட்டமாக மேலும் பல ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

இதையும் படிங்க: அமைச்சர்களுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.! எந்த ஃபைலிலும் அடுத்த 6 மாதத்திற்கு கையெழுத்து போடக் கூடாது! பின்னணியில் இருக்கும் அந்த ரகசியம்... செக் வைக்க திடீர் தடை விதித்த முதல்வர்!!!