இது புதுசா இருக்கு!! குக்கு வித் கோமாளி சீசன் 7 போட்டியாளர்கள் யாரெல்லாம் பாருங்க!!
ஓட்டு கேட்கும்போது ஒருபோதும் நான் விஜய்யை திட்ட மாட்டேன்!! ஏன்னா? சுந்தர் சி சொன்ன காரணம்..
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர்.சி, அரசியல் களத்தில் குதித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் போது நடிகர் விஜய் குறித்து விமர்சிக்க மாட்டேன் என தெரிவித்ததும் நெட்டிசன்களிடையே வைரலாகிவருகிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு மாற்றம்
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சுந்தர்.சி, பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக காதல் கலந்த நகைச்சுவை மற்றும் ஹாரர் காமெடி வகை படங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். சமீப காலங்களில் இயக்கத்துடன் நடித்தும் வருகிறார்.

இதற்கிடையில், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தும், சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார். இப்படியான சூழலில் அவர் அரசியலுக்கு வருவது எதிர்பாராத மாற்றமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய அரசியல் கணக்குகள்! அதிமுகவில் இருந்து திடீரென விலகல்... .! செம ஷாக்கில் எடப்பாடி!
மதுரை மத்திய தொகுதியில் போட்டி
ஏற்கனவே அவரது மனைவி குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் முக்கியபொறுப்பில் இருக்கும் நிலையில், தற்போது Sundar C மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் குறித்து கருத்து
பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் குறித்து விமர்சிக்க விருப்பமில்லை என கூறினார். “விஜய் என் மனைவி குஷ்புவுக்கு தம்பி போன்றவர்” எனவும் குறிப்பிட்டார். மேலும், Madurai Central தொகுதியில் முக்கிய போட்டி அதிமுக மற்றும் திமுக இடையேதான் இருக்கும் என்றார்.
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வரும் சுந்தர்.சி, இந்த தேர்தலில் எவ்வாறு தாக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரது பிரச்சாரத்திற்கும் வாக்காளர்களின் எதிர்வினைக்கும் அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சியில் விஜய்! தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கட்சி.....அதிகாரபூர்வ அறிவிப்பால் அரசியல் வட்டாரதில் பரபரப்பு!!!