அரசியல் களத்தில் இறங்கும் ராதிகா.! பரபரப்பை கிளப்பும் சரத்குமார்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?

அரசியல் களத்தில் இறங்கும் ராதிகா.! பரபரப்பை கிளப்பும் சரத்குமார்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?



sarathkumar talk about admk alliance

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும்நிலையில் தற்போதலில் இருந்தே அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டது. வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் முக்கிய தலைவர்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக திமுகவும், அதிமுகவும் போட்டியிடுகிறது.

இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என அந்தியூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராதிகா சரத்குமார் கூறியிருந்தார்.

Radhika

வரும்  சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது. அப்போது நடந்த கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக கூட்டணியில் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால், புதிய அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். நாங்கள் ஒன்று, இரண்டு இடங்களுக்கெல்லாம் போட்டியிட மாட்டோம். அதிக இடங்களில்தான் போட்டியிடுவோம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.