420 மோசடி செய்தவர்கள்.. 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள் - பிரகாஷ் ராஜ்!

420 மோசடி செய்தவர்கள்.. 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள் - பிரகாஷ் ராஜ்!



Prakash Raj roasted BJP

18 வது மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்லும் என பாரத பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

bjp

இதற்கு பிரபல நடிகரும், அரசியல் விமர்சகருமான நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, 420 மோசடி செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி நானும் இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இத்தனை தொகுதிகளை நாங்கள் கைப்பற்றுவோம் என்று ஒரு அரசியல் கட்சி கூற முடியாது. இது ஆணவமிக்கது என அவர் கூறியுள்ளார்.