நாதக முக்கியப்புள்ளி கட்சியில் இருந்து விலகல்: மனமுடைந்து பகீர் பதிவு.!

நாதக முக்கியப்புள்ளி கட்சியில் இருந்து விலகல்: மனமுடைந்து பகீர் பதிவு.!



NTK Pugazhenthi resign from party

 

நாம் தமிழர் கட்சியில் சீமானுடன் நெருக்கமான நட்பு கொண்டவராகவும், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் முக்கிய நிர்வாகியாகவும் இருப்பவர் புகழேந்தி. இவர் சென்னை கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் இவர் தனது முகநூல் பக்கத்தில், "சீமானின் வார்த்தைகள் மட்டுமே அரசியல் என்று நம்பி தொலைத்த நாட்கள் அதிகம்" என்று கூறி பதிவிட்டு இருக்கிறார். 

நாம் தமிழர் கட்சி

இதனால் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரியவரும் நிலையில், சீமானுடன் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தவர் அக்கட்சியில் இருந்து விலகியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.