அண்ணாமலைக்காக களத்தில் இறங்கிய நமீதா.! வேற லெவல் பிரச்சாரம்.!

அண்ணாமலைக்காக களத்தில் இறங்கிய நமீதா.! வேற லெவல் பிரச்சாரம்.!



namitha-canvas-for-annamalai

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா அரவக்குறிச்சியில் நேற்று பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் நமீதா மக்கள் முன்பு பேசுகையில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். நன்கு படித்தவர். விவரம் தெரிந்தவர். நல்ல திறமையானவர். அரவக்குறிச்சியில் தாமரைக்கு வாக்களியுங்கள். தாமரை மலரும், தமிழகம் வளரும் என்றார்.

நமது வேட்பாளர் வெற்றிபெற்றால், அரவக்குறிச்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். அரவக்குறிச்சி தொகுதி காய்ந்த மண்ணு பச்சை மண்ணாக மாற, அண்ணாமலைக்கு தாமரைக்கு ஓட்டு போடுங்கள். அண்ணாமலை உங்களுடைய சொந்தப் பிள்ளை. உங்களுடைய சொந்த ஊர்க்காரர். அவருக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என வாக்கு சேகரித்தார்.

namitha

பிரச்சாரத்தின்போது பாஜக கரூர் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு வாக்களித்து அவரை வெற்றிப் பெற வையுங்கள் என அப்பகுதி மக்களை கை கூப்பி கேட்டுக்கொண்டார் நமீதா.