திமுக- வின் அடுத்த மூவ்.... விஜய்யின் எம்.எல்.ஏ பதவி செல்லாது? இரண்டு வாரம் டைம்.... உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு உத்தரவு..!!!



madras-high-court-notice-to-cm-vijay-election-petition-

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்பாக முதல்வர் விஜய் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரமாணப் பத்திரத்தில் தகவல் மறைப்பு என குற்றச்சாட்டு

மனுவில், வேட்புமனு தாக்கல் செய்தபோது சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி நிலுவை தொடர்பான தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாகவும் ஆர்.டி. சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BREAKING: அதிர்ச்சி... முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது....! சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்..!!!

இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

இந்த மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம், முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

 

இதையும் படிங்க: Fghjk