BREAKING: அதிர்ச்சி... முதல்வர் விஜய்யின் வெற்றி செல்லாது....! சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பிய அதிரடி நோட்டீஸ்..!!!
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, முதல்வர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேட்புமனு விவரங்கள் குறித்து வழக்கு
மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்த இரு தொகுதிகளிலும் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் முரண்பட்ட தகவல்கள்..... அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்..!!!
தொழில்நுட்பக் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவு
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுக்களில் உள்ள சில தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. அதன்பின், வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் கவனம்
2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரே நேரத்தில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த தேர்தல் வழக்குகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை எதிர்நோக்கி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... முதல்வர் விஜய் முறைப்படி ராஜினாமா செய்தார்! அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல்..!!!