என்னா ஒரு திமிரு... சிவலிங்கம் முன் எரிந்த புனித தீபத்தில் சிகரெட் பற்றவைத்த கொடூரன்! ரத்தம் கொதிக்கும் வைரல் வீடியோ..!!!
ஆந்திரப் பிரதேசத்தின் அதோனியில் உள்ள ஒரு சிவன் கோயிலில், சிவலிங்கம் முன்பு எரிந்துகொண்டிருந்த புனித தீபம் மூலம் ஒருவர் சிகரெட் பற்றவைத்ததாக வெளியாகியுள்ள வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய இந்த காட்சி, பக்தர்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
வீடியோவை பதிவு செய்து பகிர்ந்த கூட்டாளிகள்
தகவலின்படி, கோயிலுக்குள் சென்ற அந்த நபர், சிவலிங்கத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த தீபத்தை பயன்படுத்தி சிகரெட்டை பற்றவைத்துள்ளார். அவருடன் வந்திருந்த சிலர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மனுஷன்னாய்யா நீ.... உன்ன என்ன பண்ணுச்சு! அந்த வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த பயங்கரம்.... நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!!
காவல் நிலையத்தில் புகார்
இதையடுத்து, வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தன்மையை அவமதித்ததாக கூறி பல்வேறு இந்து அமைப்புகள் அதோனி ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளன. சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைது தாமதம் குறித்து அதிருப்தி
புகார் அளித்து 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்று புகார்தாரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைத்தளங்களிலும் பலர் சம்பந்தப்பட்ட நபர் மீது விரைவாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
SHOCKING Temple Desecration in Adoni Hindus Demand Justice!
• Miscreant Vadde Eeranna (Veerupapuram, Adoni-Andhra pradesh) lit a cigarette from the sacred Deepam at Shiva Temple near Santana Anjaneya Swamy and made vulgar gestures.
• Accomplices filmed & circulated the… pic.twitter.com/q2wfvpqYSr— విష్ణు వర్ధన్ రెడ్డి-विष्णु वर्धन रेड्डी🇮🇳 (@vishnureddy_899) July 7, 2026