#BREAKING: தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் போலீஸ் கையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்....! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!!
ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைதாகியுள்ள நரேஷின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நடந்த அதிரடி சோதனை
தகவலின்படி, நரேஷின் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது விசாரணைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500....! அமைச்சர் சொன்ன சூசக பதில்.... அப்போ நாளை தெரிஞ்சுடும்!
வாக்குமூலத்தில் புதிய தகவல்
இதற்கிடையில், கைதாகியவர்கள் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், இந்த குதிரை பேர முயற்சிக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இருந்ததாகவும், அவரது தூண்டுதலின் பேரிலேயே திட்டம் வகுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீவிரமான விசாரணை
வழக்கில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கு தொடர்பான விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!