திமுகவில் அடுத்தடுத்து விழும் அடி.. சென்னை டூ தி.மலை. எ.வ.வேலுவை வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.! அதிர்ச்சியில் அறிவாலயம்..!!!



dvac-raids-former-minister-ev-velu-properties

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷன் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை

தகவலின்படி, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் நடைபெற்ற பணிகள் தொடர்பாக பெருமளவில் கமிஷன் பெறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: BREAKING: சற்றுமுன் அரசியலில் பரபரப்பு! திமுக அமைச்சரின் மகள் வீட்டில் ரெய்டு! அதிர்ச்சியில் ஸ்டாலின்...!!!

சென்னை, திருவண்ணாமலையில் தீவிர சோதனை

சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலையிலிருந்தே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய திமுக அரசின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதனால், இந்த நடவடிக்கை மாநில அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. எனினும், சோதனை தொடர்பாக அதிகாரப்பூர்வமான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!