BREAKING: இன்ப அதிர்ச்சியில் எடப்பாடி! கடைசியில் வேலுமணி சொன்ன அந்த ஒற்றை வார்த்தையால்... மொத்தமாக மாறிய அரசியல் கணக்கு!!!



eps-cv-shanmugam-aiadmk-rift-velumani-support

தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த விவகாரம் அதிமுகவில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்ததுடன், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சி.வி.சண்முகம் தரப்பும் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்..... அதிமுக வின் முக்கிய புள்ளியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கிய எடப்பாடி! அரசியலில் பெரும் பரபரப்பு!!!

“கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட்டது”

சி.வி.சண்முகம் கூறுகையில், தற்போது கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதால், தங்களை தகுதிநீக்கம் செய்யவோ அல்லது பதவிகளை நீக்கவோ எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், கட்சியின் உள்நிலை மாற்றங்களை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவரது தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

திடீர் திருப்பமாக வேலுமணி கருத்து

இந்த சூழலில், அதிமுக முன்னணி நிர்வாகியான எஸ்.பி.வேலுமணி தெரிவித்த கருத்து கட்சிக்குள் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்திய அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு கட்சியில் எந்தவித பிளவும் இல்லை என்றும், அதிமுகவின் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமை குறித்து நீண்ட நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வேலுமணி பேசியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இ.பி.எஸ் தரப்பில் உற்சாகம்

வேலுமணியின் இந்த ஆதரவு கருத்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே உற்சாகத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட உட்கட்சி குழப்பங்களுக்கு இது முக்கிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: எடப்பாடிக்கு " நான் மட்டும் எல்லாம் " என்ற எண்ணம்! எல்லாரையும் போங்க போங்கன்னு விரட்டாதீங்க! ஒரு டைம் வாங்கன்னு கூப்பிடுங்க பாருங்க! எடப்பாடிக்கு பதிலடி கொடுத்து எஸ்.பி வேலுமணி வெளியிட்ட அறிக்கை!!!