முதல்வர் விஜய் கார் ஓட்டும்போது காரில் இருந்த அந்த டம்ளர்.....! அதில் இருந்தது மதுவா..? உண்மை என்ன? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!!!
சிஎம் விஜய் கார் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காணப்பட்ட ஒரு டம்ளரை மையமாக வைத்து பல்வேறு யூகங்களும் வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
மங்களூரு பயணத்தின் போது எடுக்கப்பட்டதாக தகவல்
கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொண்ட சிஎம் விஜய், மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது காரை தானே ஓட்டியதாக கூறப்படுகிறது. வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் அவர், நடிகராக இருந்த காலத்திலிருந்தே பலமுறை தானாகவே கார் ஓட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஷ்! மீண்டும் இணைந்தனர்.... முதல்வர் விஜய் - சங்கீதா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!
இந்த பயணத்தின்போது அவரது மேலாளர் ஜெகதீஷ், உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் தனிப்பட்ட பாதுகாவலர் மூசா உள்ளிட்ட நெருங்கிய குழுவினர் உடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டம்ளரை வைத்து பரவும் யூகங்கள்
வைரலாகும் வீடியோவில் காருக்குள் காணப்பட்ட டம்ளர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. அதில் இருந்தது என்ன என்பது குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், சிலர் தங்களது ஊகங்களை தகவல்களாக பகிர்ந்து வருகின்றனர்.
வீடியோவை பார்த்த பலரும் இந்தக் கூற்றுகளுக்கு ஆதாரம் இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை உண்மையாக நம்பும் ஒரு தரப்பும் இருப்பதால், விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாததால் தொடரும் விவாதம்
பொதுவாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் அல்லது சர்ச்சைகள் உருவாகும் போது சம்பந்தப்பட்ட தரப்புகள் விளக்கம் அளிப்பது வழக்கம். ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை தவெக தரப்பிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
அரசியல் தலைவர்களை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் பின்னணியில் பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆதாரமற்ற தகவல்கள், ஒரு குறிப்பிட்ட கருத்தை மக்களிடையே உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றன.
சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய தளமாக இருந்தாலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே எந்த தகவலாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்த பிறகே நம்பவும் பகிரவும் வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
Exclusive video of Tamil Nadu Chief Minister Vijay driving a car during his visit to Mangaluru..❤️🔥🤩 @TVKVijayHQ #TVKVijay #jananayagan #thalapathyvijay #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/Jo2KHkwboZ
— Tamizharasu🧊🔥 (@tony_tamizh) June 14, 2026
இதையும் படிங்க: அடுத்த சம்பவமா.... சேகர் பாபுவுடன் ரகசிய மீட்டிங் போட்ட முக்கிய புள்ளி...! செம ஷாக்கில் எடப்பாடி..!!!