இடைத்தேர்தலில் தவெக-வுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! விஜய் டேபிளுக்குப் போன அந்த ஷாக் ரிப்போர்ட்... எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்!!!



tvk-former-aiadmk-mlas-bypoll-chairman-post-speculation

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. காலியாக உள்ள 8 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலைச் சுற்றி பல்வேறு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தல் அறிவிப்பில் சட்டச் சிக்கல்

முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜயபாஸ்கர்கள் உட்பட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததாலும், முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் காலி செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இதில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஜூலை 31 வரை இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் மற்றும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகார்களும் தேர்தல் நடைமுறையில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமே..... CM விஜய்யின் முடிவால் சிக்கலில் சிக்கி தவிக்கும் முன்னால் எம். எல்.ஏ.க்கள்..! அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!

கருத்துக்கணிப்பால் மாறிய நிலை?

இதற்கிடையில், காலியாக உள்ள தொகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கணிப்பு முடிவுகளில், திருச்சி கிழக்கைத் தவிர மற்ற 7 தொகுதிகளில் தவெகவுக்கு சாதகமான சூழல் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களில் இரண்டு விஜயபாஸ்கர்களைத் தவிர மற்ற 5 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மாற்று பொறுப்பு கோரி ஆலோசனை

இதனால் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்குப் பதிலாக பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகளை வழங்குமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து கவலையடைந்த சிலர், அதிமுகவில் உள்ள பழைய நிர்வாகிகளுடனும் நண்பர்களுடனும் மீண்டும் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

 

இதையும் படிங்க: அதிமுக-வில் அடுத்த விக்கெட் காலி.... தவெக-வில் இணைந்த அதிமுகவின் முக்கிய புள்ளி...! அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்..!!!