உங்களுக்கான ஆப்பை நீங்களே வைத்துக்கொண்டீர்கள்.. திமுகவை விளாசிய புளூ சட்டை மாறன்!
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் லண்டனில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் குழுவினர் பங்கேற்ற கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த சம்பவமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சினிமா மற்றும் அரசியல் விமர்சகரான புளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தளத்தில் திமுகவை விமர்சிக்கும் வகையில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவின் அரசியல் பின்னடைவுகளுக்கு அக்கட்சியே காரணம் என்றும், சினிமா பிரபலங்களை மையப்படுத்திய அரசியல் அணுகுமுறைகள் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து திமுக ஆதரவு சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் திரைப்படங்களை தயாரித்ததையும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், தற்போதைய அரசியல் சூழலில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: “அவதூறுக்கும் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்”.. திமுகவை விளாசிய அமைச்சர் ரமேஷ்!
திமுகவின் தோல்விக்கு காரணம் திமுக:
* தொடர் தோல்விகளை தந்து வந்த தலீவரை வைத்து.. இன்றுவரை படங்கள் எடுக்கிறது பன் பிக்சர்ஸ்.
* தலீவர் இவர்களிடம் பலகோடி சம்பளம் வாங்கினாலும்.. அவருக்கு திமுகவை விட பாஜக தான் பிடிக்கும்.
* திமுகவை திட்டிய.. மார்க்கெட் இல்லாத உலக்கை நாயகனை வைத்து தொடர்ந்து படங்கள் எடுத்தது சிகப்பு பெருசு.
* இப்போது இரண்டு பெருசுகளையும் வைத்து பலகோடி செலவில் படம் தயாரிக்கிறது திராவிட வாரிசு சிறுசு.
* தேர்தலுக்கு முன்பு.. அணிலை வெறுப்பேற்ற ஆமைக்கு சொம்படித்தது கலக தலைமை. பாவம். ஆமைக்குஞ்சுகளின் ஓட்டும் கிடைக்கவில்லை.
* அதேபோல நெத்திலி மீனாக இருந்த சுறாவை வைத்து பல படங்கள் எடுத்து.. அவரது சம்பளத்தை ஏற்றி விட்டது பன் பிக்சர்ஸ் மற்றும் செகப்பு பெருசு. இன்று அவர் ஆட்சியையே பிடித்து விட்டார்.
* இப்போது அணிலும், ஆமையும் கூடிக்குலாவி அறிவு ஆலயத்தை வெறுப்பேற்றுகின்றன.
நீங்கள் பல ஆயிரம் கோடி செலவழித்து வளர்த்துவிட்ட இந்த சினிமாக்காரர்களால் அவர்களுக்கு மட்டுமே லாபம்.
* உங்களுக்கான ஆப்பை நீங்களே வைத்துக்கொண்டீர்கள்.
இனியாவது திருந்துங்கள்.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 13, 2026
தொடர்ந்து, சினிமா பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களின் வளர்ச்சிக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவியதன் விளைவுகளை திமுக எதிர்கொண்டு வருவதாக புளூ சட்டை மாறன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவழித்து வளர்த்த சினிமா பிரபலங்கள் இறுதியில் அவர்களுக்கே லாபமாக மாறிவிட்டனர் என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
இறுதியாக, திமுக தனது அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து திருந்த வேண்டும் என புளூ சட்டை மாறன் வலியுறுத்தியுள்ளார். அஜித்–விஜய் சந்திப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட இந்த அரசியல் விமர்சனப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: "யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள்.. திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக!