"தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும்" , திமுக அரசை கடுமையாக சாடிய அண்ணாமலை.!! 



Annamalai about DMK

கோவை: 

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருப்பதாவது:- திமுகவினர் செந்தில் பாலாஜியை உத்தமன் போல
சித்தரிக்கிறார்கள். மேலும் அவர்களது தவறை மறைக்க கவர்னரை வில்லனாக்க முயற்சி செய்து வருகிறார்கள். திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் நிறைய இருக்கிறது. அதனை விட்டுவிட்டு கவர்னரை சீண்டி பார்க்கிறார்கள்.

மேலும் அவரை ஒருமையில் பேசி தரை குறைவாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் தவறு என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மட்டும் தான் கவர்னருக்கு ஏற்ற மரியாதை இல்லாத சூழலை இந்த அரசு ஏற்படுத்தி உள்ளது என்றும் சாடினார். மேலும் கவர்னர் தமிழ்நாடு அரசு கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அவர்கள் அரசியல் பேச கூடாதா என்று நானே சொல்லி இருக்கிறேன்.

இதனால் தமிழ்நாடு அரசு கவர்னரை தேவையில்லாமல் வில்லனாக சித்தரிப்பது ஏற்க முடியாத செயலாகும். மேலும் ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது அவரது தோல்வி பயத்தை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். திமுக என்று ஆட்சிக்கு வந்ததோ, அப்போதிலிருந்து தமிழ்நாடு குற்றவாளிகளின் புகலிடமாக மாறி உள்ளது. சட்ட ஒழுங்கும் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது தான் அனைவரும் புலம்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.