அஜித்திற்காக அவரது மனைவி ஷாலினி செய்த செயல்.! வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!?
43 வயது அதிமுக எம்எல்ஏவுக்கு 23 வயது மணப்பெண்; கடைசியில் நடந்த பரிதாபம்
43 வயது அதிமுக எம்எல்ஏவுக்கு 23 வயது மணப்பெண்; கடைசியில் நடந்த பரிதாபம்
43 வயது அதிமுக எம்எல்ஏவான ஈஸ்வரனுக்கும் 23 வயதே ஆன பெண்ணுக்கும் தமிழக முதல்வர் தலைமையில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் மணப்பெண் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஈஸ்வரன். அவருக்கு வயது 43 . இவர் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்து வருகிறார்.
இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். அவருக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா என்ற 23 வயதான இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமணம் வருகிற 12-ந்தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் நடக்க இருந்தது. திருமணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் நடைபெறுவதாக இருந்தது. .
இந்த திருமணத்திற்கு பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் மணமகள் வீட்டிலும் உறவினர்களுக்கு கடந்த ஒரு வாரமாக கொடுத்து வந்தனர்.
திருமணத்துக்கு 9 நாட்களே இருந்த நிலையில் மணமக்கள் வீடு கோலாகலமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணமகள் சந்தியா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் சந்தியா அவரது அக்கா வீட்டுக்கு போகாமல் மாயமாகி விட கடந்த 2 நாட்களாக தேடிப்பார்த்துள்ளனர். கிடைக்காத காரணத்தால் சந்தியாவின் தாயார் தங்கமணி கடத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
மாயமான சந்தியா திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவரை காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருடன் சந்தியா சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சந்தியாவின் தாயார் அளித்த புகாரிலும் இதை கூறியுள்ளார். தனது மகளுக்கும் விக்னேஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.