"பெண்களுக்கு ஏற்படும் குறட்டைப் பிரச்சனைக்கு இதுதானா காரணம்!"

குறட்டை என்பது தூங்கும்போது சுவாசத்தில் ஏற்படும் பாதிப்பினால் தான் ஏற்படுகிறது. ஆண்கள், பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் அனைவருமே தூங்கும்போது குறட்டை விடுவர். இந்தக் குறட்டை சத்தத்தில் நிம்மதியான தூக்கமும் கெடும். இது ஒரு சாதாரணப் பிரச்சனையல்ல.
பெரும்பாலும் குறட்டை என்பது சுவாசப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். நாள்பட்ட குறட்டை எனபது வேறொரு ஆழமான பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். மேலும் பெண்களுக்கு இந்தக் குறட்டைப் பிரச்சனை ஏற்படுவதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் பெண்களின் எடை அதிகரிப்பதாலும், நாசியில் உள்ள ரத்தநாளங்கள் விரிவடைவதாலும் குறட்டைப் பிரச்சனை ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் குரல்வளை அமைதியாக ஓய்வாக இருக்கும்போதும் குறட்டை ஏற்படுகிறதாம்.
மேலும் கழுத்தில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சுவாசப்பாதையைத் தடுத்து, காற்றின் ஓட்டத்தையும் தடுக்கிறது. மேலும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறைவாக இருக்கும்போதும் படபடப்பு, கரகரப்பு போன்ற பிரச்சனைகளோடு இந்த குறட்டைப் பிரச்னைக்கும் வழிவகுக்கிறது.