தொடர்ந்து 48 நாட்களுக்கு, தினமும் காலையில் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்.!?

தொடர்ந்து 48 நாட்களுக்கு, தினமும் காலையில் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால்.!?



Benefits of eating red banana

தினமும் காலையில் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உடலில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து பலவகையான நோய் பாதிப்புகள் குணமடைகிறது என்று சித்த வைத்திய மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன. செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் குணமடையும் என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

Love

1. ஆண்களுக்கு ஏற்படும் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரி செய்து, குழந்தை பேரு உண்டாக வழிவகை செய்கிறது.

2. தம்பதியர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் சாப்பிட்டால் தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
3. சுண்ணாம்பு மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பார்வை தெளிவு பெறும்.
4. சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு செவ்வாழைப்பழம் மிகச்சிறந்த தீர்வாக கருதப்பட்டு வருகிறது.
5. தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமடைகிறது.
6. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதில் செவ்வாழைப்பழம் அருமருந்தாக பயன்பட்டு வருகிறது.
7. மலச்சிக்கல், மூலநோய் போன்ற பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
8. சிறுநீரக கற்கல், இதய நோய் பாதிப்பு  போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது.

Love

9. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களும் செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம். இவ்வாறு பல்வேறு நன்மைகள் உடைய செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது.