போதையில் வெறிச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள்... மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...!

போதையில் வெறிச் செயலில் ஈடுபட்ட இளைஞர்கள்... மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்...!


Youngsters engaged in frenzy on drugs... Cruelty happened to a three-year-old child...

மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெற்கு டெல்லியில் உள்ள பத்தேபூர் பேரியில் வசிக்கும் ராணி என்பவருக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. ராணியின் வீட்டருகே மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி பகுதியை சேர்ந்த, ராம்நிவாஸ் பனிகா(27), சக்திமான் சிங் (22) என்ற இரண்டு இளைஞர்கள் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ராணியின் மூன்று வயது பெண் குழந்தை வீட்டில் இல்லாததால் பதறிப்போய் ராணி தனது குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். அங்கிருந்தவர்கள் காட்டுப்பகுதி அருகே குழந்தையை இரண்டு இளைஞர்கள் குழந்தையை தூக்கி சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர். 

இதைகேட்ட குழந்தையின் தாய் ராணி அங்கு சென்று பார்த்த போது, அங்கே குழந்தை அழுது கொண்டிருந்தது. மேலும், குழந்தையின் உறுப்பில் ரத்த காயம் இருந்துள்ளது. இதை பார்த்து பதறிப்போன ராணி உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

மேலும் இளைஞர்கள் இரண்டு பேர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில், இளைஞர்கள் ராம்நிவாஸ் மற்றும் சக்திமான் சிங் இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த குற்றச் செயலை இருவரும் மது போதையில் செய்ததாக கூறப்படுகிறது. 

இரண்டு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.