"காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் தனது இளம் காதலியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுடன் முதியவர் தற்கொலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயண்ராம் ஜாட். 60 வயதான இவர் தனது வீட்டில் 19 வயது இளம் பெண்ணுடன் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
19 வயது பெண்ணுடன் காதல் காவல்துறை விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நாராயண்ராம் 19 வயது இளம் பெண்ணை காதலித்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார்களா.? அல்லது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன நாராயண்ராமின் மனைவி மற்றும் மகன் பெங்களூருவில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!
கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மேலும் தற்கொலை செய்து கொண்ட நபரின் வீட்டிலிருந்து ஏராளமான கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர். இது தொடர்பான தகவல்களை பகிர காவல்துறை தரப்பு மறுத்துவிட்டது. இந்த கடிதங்கள் காதல் சம்பந்தப்பட்டதா.? அல்லது குடும்பத்துடன் தொடர்புடையதா.? என தெரியவில்லை. முதியவர் இளம் பெண்ணுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: "அதிர்ச்சியை கிளப்பும் 6 பக்க கடிதம்..." கழுத்தறுக்கப்பட்டு மகன் கொலை.!! பகீர் பின்னணி.!!