ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! நடுரோட்டில் தள்ளிவிட்டு ஏறி மிதித்து புரட்டி எடுத்த சிங்க பெண்.!

ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபர்.! நடுரோட்டில் தள்ளிவிட்டு ஏறி மிதித்து புரட்டி எடுத்த சிங்க பெண்.!



women attacked man in bus

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, படிஞ்சராதரா என்ற பேருந்து நிறுத்தத்தில் மது போதையில் பூவாழன் என்ற நபர் பேருந்தில் எறியுள்ளார். மது போதையில் இருந்த பூவாழன் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார்.

பேருந்து சென்றுகொண்டிருந்த சிறிது நேரத்தில் மதுபோதையில் இருந்த பூவாழன் சந்தியாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சந்தியா வேறு இருக்கைக்கு சென்று அமருமாறு பூவாழனிடம் கூறினார். ஆனால், பூவாழன் தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து செல்லாமல் அதிலேயே தொடர்ந்து அமர்ந்துகொண்டு சந்தியாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை கவனித்த சக பயணிகள் நடத்துனரிடம் கூறி பூவாழனை வேறு இருக்கையில் அமரும்படி கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பூவாழன் சந்தியாவை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி பேருந்து முன் நின்று தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் பேருந்துக்குள் ஏறிய பூவாழன் சந்தியாவின் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதனால் உச்சகட்ட ஆத்திரமடைந்த சந்தியா மதுபோதையில் இருந்த பூவாழனை நின்றுகொண்டிருந்த பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டார். பின்னர் கீழே விழுந்த பூவாழனை அடித்து உதைத்து நடுரோட்டில் தர்ம அடி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், துணிச்சலாக செயல்பட்ட பெண் பயணி சந்தியாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.