"கணவனைக் கொல்ல 1 லட்ச ரூபாய்..." மருமகனுடன் கள்ள உறவு.!! மனைவியின் கொடூரம்.!!
உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கியில் மனைவி, தனது கணவரை கொல்ல 1 லட்ச ரூபாய் ரிக்சா ஓட்டுநருக்கு கொடுத்து கொலை செய்து பின்னர் தனது கணவர் விபத்தில் இறந்ததாக போலீசாரிடம் கூறி நாடகம் நடித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 13ம் தேதி தனது மனைவி பூஜா மற்றும் அவர்களின் 8 வயது மகன் தேவா கண்காட்சிக்கு சென்றுள்ளனர். கண்காட்சியில் இருந்து திரும்பும் போது லக்னோ சாலையில் அவரது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. விபத்து என போலீசாரிடம் புகாரளித்தார்மனைவி. பின்னர் விசாரணையில் இறந்தவரின் மனைவி பூஜா தனது சொந்த மருமகனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த கணவர் வாக்குவாதம் செய்துள்ளார். எனவே கணவரை விட்டு விலக பூஜா உறுதியாக இருந்ததால் லக்னோவை சேர்ந்த ரிக்சா ஓட்டுநரான கமலேஷ் என்பவரை சின்ஹாட்டில் சந்தித்து தன் கணவரை கொல்ல 1 லட்ச ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.

கடந்த அக்டோபர் 13ம் தேதி மாலை தாமே ரிக்சாவை முன்பதிவு செய்து ஓட்டுநர் என்று கூறி அனுமந்தலாலின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கணவரின் கொலையை விபத்து எனக்கூறி நாடகமாடிய மனைவி மற்றும் காதலன் மற்றும் ரிக்சா ஓட்டுநர் ஆகியோரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!
இதையும் படிங்க: போதைப் பெண் கூட்டு பலாத்காரம்... ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது.!!