பெண்கள் 3 பவுன் நகை மட்டுமே அணிய அனுமதி! மீறினால் ரூ.50000 அபராதம்...எங்கு தெரியுமா..??



uttarakhand-village-jewellery-restriction-women

இந்தியாவின் பல பகுதிகளில் சமூகச் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம மக்கள் தங்களே விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதற்கு ஓர் உதாரணமாக உத்தரகண்டில் சமீபத்தில் எடுத்த முடிவு தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

நகைகளுக்கு வரம்பு விதித்த கிராம கூட்டம்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஜான்சர்-பவார் பகுதிக்குட்பட்ட சக்ரதா தொகுதியில் அமைந்த கண்டட் மற்றும் இட்ரோலி கிராமங்களில், சமூக நிகழ்வுகள் மற்றும் திருமணங்களில் பெண்கள் 3 பவுன் நகைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படும் என கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். காதணி, மூக்குத்தி மற்றும் மங்களசூத்திரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வரும் புதன்கிழமை பால் விநியோகம் நிறுத்தம்! ஆவின் உட்பட எந்த பாலும் கிடைக்காது! மாபெரும் போராட்டம்...

அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை

இந்த புதிய விதியை மீறும் எவருக்கும் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் சமத்துவம் மற்றும் எளிமை நிலைநாட்டும் முயற்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணங்களில் அதிக அளவு நகைகளை காட்சிப்படுத்தும் போட்டி பல குடும்பங்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்திவருகிறது என்பதே இந்த முடிவின் பின்னணி. இம்முயற்சி சமூக ஒற்றுமை மற்றும் நிதி சுமை குறைப்புக்கு உதவும் என நம்பப்படுகிறது.

இந்த முடிவு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சமூகச் சீர்திருத்த முயற்சியாக இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் விவாதத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

 

இதையும் படிங்க: கனமழை காரணமாக தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விவரம் இதோ...