கார் விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாப பலி: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை.!

கார் விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாப பலி: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தை.!



Uttar Pradesh Varanashi Car Accident 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியிலிருந்து, ஜான்பூர் பகுதிக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

நேற்று காலை இந்த கார் பூபூர் பகுதியில் சென்றபோது, லாரி மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த எட்டு பேர் பரிதாபமாக பலியான நிலையில், காருக்குள் இருந்த மூன்று வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், குழந்தை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.