5 வயது பச்சிளம் சிறுமியை தனியே அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக அத்துமீறல்: 12 வயது சிறுவனின் பதறவைக்கும் காரியம்.!

5 வயது பச்சிளம் சிறுமியை தனியே அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக அத்துமீறல்: 12 வயது சிறுவனின் பதறவைக்கும் காரியம்.!



Uttar Pradesh 5 Aged Minor Girl Raped by 12 Aged Minor boy


உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரதோய் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி, சம்பவத்தன்று தனியே இருந்துள்ளார். சிறுமியை கவனித்துக்கொள்வதாக கூறிய 12 வயது சிறுவன், தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். 

அங்கு சிறுமியை கயவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அலறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். 

சிறுவனின் அதிர்ச்சி செயலை நேரில் கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.