UPSC தேர்வுக்கு தயாரான மாணவர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி கடிதம்!

UPSC தேர்வுக்கு தயாரான மாணவர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான அதிர்ச்சி கடிதம்!



UPSC student suicide in Karnataka

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லாபூர் தாலுக்காவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் எம்.ஏ.எம்.எட் படித்து முடித்துள்ள நிலையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் வருடாந்திர போட்டித் தேர்வுக்கு தயாராகி வாழ்ந்தார்.

karnataka

இந்த நிலையில் நேற்று முன் தினம் ஜெகதீஷ் வீட்டில் அனைவருக்கும் ஊருக்கு சென்று விட்டனர். இதனையடுத்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜெகதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலில் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

karnataka

இதனிடையே ஜெகதீஷின் அறையை போலீசார் சோதனை செய்ததில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் தேர்வு பயத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக ஜெகதீஷ் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.